Great Life Tamil Quote

ஒரு இளைஞன் காட்டில் இருந்த சாதுவை சந்தித்தார். சாதுவிடம், வெற்றிக்கான ரகசியம் என்ன? என கேட்டார். இளைஞன் சொன்னதை கூர்ந்து கவனித்த சாது, ‘நாளை காலை ஆற்றோரம் வந்து விடு, சொல்கிறேன்’ என்றார்.

இளைஞனும் மறுநாள் காலை ஆற்றோரம் சென்றார். சாது அந்த இளைஞரை அழைத்து, என்னுடன் இந்த ஆற்றினுள் நடந்து வா! என்றார். இளைஞனும் நடந்தார். இருவரும் ஆற்றிற்குள் நடந்தனர். கழுத்து முட்ட ஆற்று நீர் வந்து விட்டது.

இளைஞன் எதிர்பாராத சமயத்தில் சாது, அந்த இளைஞனின் தலையை பிடித்து ஆற்றினுள் அழுத்தினார். இளைஞன் மூச்சு மூட்ட வெளியே வர திமிறினார். ஆனால் சாது மிகவும் அழுத்தமாக இளைஞரை ஆற்றில் அழுத்தினார்.

சிறிது நொடி பொழுதுகளுக்கு பின், இளைஞனின் தலையை ஆற்றை விட்டு வெளியில் எடுத்தார் சாது. இளைஞன் மூச்சி முட்ட வேகமாக காற்றை சுவாசித்தார்.

இப்பொழுது சாது இளைஞரை பார்த்து, ‘ஆற்றினுள் இருந்த பொழுது நீ என்ன நினைத்தாய்?’ என கேட்டார். ‘காற்றை சுவாசிக்க வேகமாக முயன்றேன்’ என்றார். 

அதற்கு அந்த சாது, ‘நீ செய்யும் செயலில் வேண்டியதை அடைய, இதே வேகத்தில் செயல் பட வேண்டியது தான், வெற்றியின் ரகசியம்’ என்றார்.

பேரார்வத்துடன், ஒன்றை அடைய அதிவேகமாக செயல்படுவது வெற்றியை கொடுக்கும்.

UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.

%d bloggers like this: